முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பரவலாக மழை

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன் 3 - சென்னை நகரை கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று முதல் சென்னை நகரில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. சென்னை நகரில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்ததையொட்டி இதுவரை இருந்து  வந்த கோடை வெப்பம், கத்திரி வெய்யிலை சந்தித்த மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. 

பருவமழை துவங்கியதன் காரணமாக கோடை வெயிலின் தகிப்பு குறைந்து இதமான குளிர்காற்று வீசி பூமியை குளிச்சியான சூழலுக்கு மாற்றியது. இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்