முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பி.சி.சி.ஐ அவசரக் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன். 3 - இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று கூடியது. இதில் தலைவர் என். சீனிவாசன் பதவி விலகுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிகரித்துள்ள கடும் நெருக்கடிகளைத் தொடர்ந்து சீனிவாசன் பதவி விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. ஐ.பி.எல். தலைவர் பதவியிலிருந்து ராஜீவ் சுக்லா பதவி விலகி விட்டார். பி.சி.சி.ஐ. செயலாளர் பதவியிலிருந்து ஜெகதாலே விலகினார். தொடர்ந்து பலர் பதவி விலகி விட்டனர். இதனால் சீனிவாசனுக்கு நெருக்கடி அதிகரித்தது. 

இதையடுத்து அவர் பதவி விலகும் மன நிலைக்கு வந்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று கிரிக்கெட்வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் குருநாத் மெய்யப்பன் விவகாரம், ஸ்பாட் பிக்ஸிங் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்