முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்டம்: மும்பை விமான நிலையத்தில் புக்கி கைது

திங்கட்கிழமை, 3 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

மும்பை,ஜூன்.4 - ஐ.பி.எல் .கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மும்பை சர்வதேச விமான நிலையத்தில் மேலும் ஒரு புக்கியை மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது பெயர் கிஷோர்பட்லானி என்ற கிஷோர்புனே. இவரை மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். சூதாட்ட விவகாரத்தில் தனது பெயர் அடிபட்டதுமே இவர் ஐரோப்பாவிற்கு தப்பி ஓடினார். பிறகு அங்கிருந்து திரும்பியபோது நேற்று தங்களால் கைது செய்யப்பட்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள புக்கிகளுக்கிடையே இணைப்பு பாலமாக இருந்து இவர் செயல்பட்டிருக்ககூடும் என்ற ரீதியில் போலீசார் இவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த வழக்கில் கடந்த சனிக்கிழமை டெல்லியை சேர்ந்த புக்கி அஸ்வின் அகர்வாலை மும்பை போலீசார் கைது செய்தனர். இவரை 6-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூதாட்டம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட இது வரை 13 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 4 பேருக்கு வருகிற 14-ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் எனவே போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்ற போலீசாரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்ககவில்லை. இதையடுத்து ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 4 பேர் நீதிமன்றகாவலில் வைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்