முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருநாத் மெய்யப்பனுக்கு 14-ம் தேதி வரை காவல்

திங்கட்கிழமை, 3 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.4 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பனுக்கு ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை மும்பை போலீசார் கடந்த 23-ம் தேதி கைது செய்தனர். சூதாட்ட தரகர்களஅஉடன் நேரடி தொடர்பு வைத்திருந்த இந்தி நடிகர் விண்டு தாராசிங்குடன் 150-க்கும் மேற்பட்ட முறை குருநாத் மெய்யப்பன் போனில் பேசியிருந்தார். விண்டு மூலம் குருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் சென்னை அணி பற்றிய விவரங்களை குருநாத் மெய்யப்பன் விண்டு மூலம் சூதாட்ட தரகர்களுக்கு அறிவித்து இருக்கிறார். கடந்த 10 தினங்களாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

குருநாத் மெய்யப்பனின் போலீஸ்காவல் நேற்றுடன் முடிந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் நேற்று கோர்ட்டில்ஆஜர் படுத்தினர். அவரை வருகிஹ 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஆர்தர் ரோட்டில் உள்ள சிறைக்கு அவரை போலீசார் கொண்டு சென்றனர். மேலும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட நடிகர் விண்டு மற்றும் 2சூதாட்ட தரகர்களும் வருகிற 14-ம் தேதி வரை நீதிமன்றகாவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்