முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலிடம் நஷ்ட ஈடு கேட்கிறது அசாம் கண பரிஷத்

வியாழக்கிழமை, 6 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி, ஜூன். 7 - அசாம் கண பரிஷத் கட்சியை பயங்கரவாதிகளுடன் இணைத்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கோர அந்த் கட்சி முடிவு செய்துள்ளது. அசாம் கண பரிஷத் கட்சி பயங்கரவாதிகளுடன் துணையுடன் தான் அசாமில் ஆட்சி அமைத்தது என்று ராகுல் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது. இந்த தவறான குற்றச்சாட்டுக்காக ராகுல் காந்தி 15 நாட்களுக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரிடம் ரூ. 500 கோடி நட்ட ்டு கேட்டு சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று அசாம் கண பரிஷத் இளைஞரணி தலைவர் கிஷோர் உபாத்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்திக்கு அக்கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராகுல் கூறியது சரிதான் என்று காங்கிரஸ் தலைவரும், அசாம் மாநில முதல்வருமான தருண் கோகோய் கூறியுள்ளார். உல்டிபா பயங்கரவாத அமைப்பின் உதவியுடன்தான அசாம் கண பரிஷத் ஆட்சி அமைத்தது என்கிறார் கோகோய்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்