முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நரேந்திரமோடி ஒரு சர்ச்சைக்குரிய தலைவர்: டெல்லி காங்.

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.10 - ராகுல்காந்தியையும், நரேந்திர மோடியையும் எந்த வகையிலும் ஒப்பிடக்கூடாது. காரணம் ராகுல்காந்தி சர்ச்சைக்கு அப்பாற்பட்ட தலைவர். ஆனால் மோடியோ சர்ச்சையின் மொத்த உருவம் என்று டெல்லி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், டெல்லி நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான அரவிந்தர் சிங்தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் கூறியதாவது, பாஜக செயற்குழுவில், ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். அதாவது பாஜகவின் பிரச்சார குழு தலைவராக மோடி இருப்பார் என்று  ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். ஆனால் இந்த செயற்குழு கூட்டத்திற்கு பல முக்கிய தலைவர்கள் வரவேஇல்லை. காரணம் மோடிக்கு பதவி தருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை.  ராகுல்காந்தி சர்ச்சைக்கு அப்பாற்பட்டவர். ஆனால் மோடி அப்படியல்ல. எல்லா பிரச்சினைகளுக்கும் மோடிதான் காரணம். எனவே ராகுலையும், மோடியையும் ஒப்பிடக்கூடாது. அப்படி ஒப்பிட்டால் அதை ஏற்க முடியாது. காரணம் மோடியை பாஜகவிலேயே பலர் இன்னும் ஏற்கவில்லை. காங்கரசில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் ராகுல் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால் அவர்தான் அதை விரும்பவில்லை. ஆனால் அங்கேயோ மோடி தன்னை பிரதமர் வேட்பாளராக முன்

னிறுத்த படாதபாடு படுகிறார். டெல்லியில் நீங்கள் வளர்ச்சியை காணலாம். ஆனால் குஜராத்தில் காண முடியாது. இவ்வாறு அமைச்சர் அரவிந்தர்சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்