எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, மே - 2 - ஐ.பி.எல். போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ஐ.பி.எல். போட்டித் தொடரின் 37-வது போட்டியில் கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக கில்கிறிஸ்ட் மற்றும் அதிரடி வீரர் பால் வல்தாட்டி ஆகியோர் களமிறங்கினர். ஆனால் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காத கொல்கத்தா ஆடுகளத்தில் ரன் எடுக்க துவக்க ஆட்டக்காரர்கள் சிரமப்பட்டனர். ஆனாலும் கில்கிறிஸ்ட் வேகப்பந்து வீச்சை சமாளித்து தனது வழக்கமான அதிரடி மூலம் ஓரளவு ரன்களைச் சேர்த்தார். இதனால் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுவந்தார் காம்பீர். இதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. அதுவரை அதிரடியாக ஆடாத வல்தாட்டி, யூசுப்பதானின் பந்தை தூக்கி அடித்தார். ஆனால் பந்து நேராக மனோஜ் திவாரியின் கையில் கேட்ச்சாக மாறியது. அப்போது பஞ்சாப் அணி 4.3 ஓவர்களில் 32 ரன்களை எடுத்திருந்தது. அடுத்ததாக மார்ஷ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 40 ஆக இருந்தபோது மார்ஷ் 5 ரன்களே எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். இந்த நிலையில் ஓரளவு நல்ல முறையில் ஆடிக்கொண்டிருந்த கில்கிறிஸ்ட், சுழற்பந்து வீச்சாளர் இக்பால் அப்துல்லா விக்கெட்டிற்கு நேராக வீசிய பந்தை சரியாக கணிக்காமல் மட்டையை சுழற்ற அந்த பந்து மட்டையில் படாமல் கில்கிறிஸ்ட்டின் கால்களுக்கு இடையில் சென்று விக்கெட்டை பதம்பார்த்தது. 27 பந்துகளில் 26 ரன்களை எடுத்த கில்கிறிஸ்ட் அவுட்டானது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. அப்போது பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 7.5 ஓவர்களில் 44 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்துவந்த நாயரும் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து ஹஸ்ஸி, தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை ஓரளவு ரன்களை எடுத்தது. ஆனாலும் அதிரடியாக ரன் குவிக்க இவர்களாலும் முடியவில்லை. இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 15 ஓவரில் 86 ஆக இருந்தபோது ஹஸ்ஸி, அப்துல்லாவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து பிபுல் சர்மா கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் ஒன்று இரண்டாக ரன்களை சேர்க்க பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 117 ரன்களை எடுத்திருந்தபோது கார்த்திக் ரன் அவுட் ஆனார். இவர் 42 பந்துகளில் 42 ரன்களை எடுத்திருந்தார். இவரைத் தொடர்ந்து குமார் களமிறங்கினார். இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டும் எடுத்தது. பிபுல் சர்மா ஆட்டமிழக்காமல் 16 ரன்களையும், குமார் 2 ரன்களையும் எடுத்திருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் இக்பால் அப்துல்லா 19 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், யூசுப் பதான் சிக்கனமாக பந்துவீசி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. துவக்க ஆட்டக்காரர்களாக காலிஸ் மற்றும் மோர்கன் ஆகியோர் களமிறங்கினர். அதிர்ச்சியளிக்கும் வகையில் காலிஸ் 1 ரன்னை மட்டுமே எடுத்த நிலையில் பட்டின் பந்தில் ஹஸ்ஸியால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனால் பஞ்சாப் அணி சற்று தெம்படைந்தது. அடுத்து மோர்கனுடன் கேப்டன் காம்பீர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ரன்களைச் சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 4.2 ஓவரில் 35 ரன்களை எடுத்திருந்தபோது மோர்கன், பட்டின் பந்திலேயே ஹாரிசால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 28. இவரை அடுத்து மனோஜ் திவாரி களமிறங்கினார். மனோஜ் திவாரியும் காம்பீரும் சிறப்பாக பந்துகளை எதிர்கொண்டனர். இவர்கள் அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். இதனால் கொல்கத்தா அணியின் இலக்கு எளிதானது. இந்த ஜோடியை பிரிக்க பஞ்சாப் பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. இந்நிலையில் 17.2 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 120 ரன்களை எட்டியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிய வெற்றியைப் பெற்றது. காம்பீர் ஆட்டமிழக்காமல் 44 ரன்களையும், திவாரி 34 ரன்களையும் எடுத்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சார்பாக பட் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய இக்பால் அப்துல்லா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 8 போட்டிகளின் முடிவில் 10 புள்ளிகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.