முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அரையிறுதி

திங்கட்கிழமை, 2 மே 2011      விளையாட்டு
Image Unavailable

பெங்களூர்,மே.- 2 - இனி வரும் 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்று புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.  பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் தோற்றது. அதன் பின்னர் யுவராஜ் கூறும் போது,
நாங்கள் பந்து வீசிய போது 20 ரன்களை கூடுதலாக கொடுத்து விட்டோம். பேட்டிங்கிலும், வேகமாக ரன் சேர்க்க தவறி விட்டோம். இதுவே தோல்விக்கான காரணங்கள் என நினைக்கிறேன். இனி விளையாடவுள்ள 6 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும். அதனால் இனி வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாட வேண்டும்.
பெங்களூருக்கு எதிரான தோல்விக்கு டாஸை இழந்ததும் ஒரு காரணம். நாங்கள் கடந்த 5 ஆட்டங்களில் டாஸ் வென்ற போதும் அதில் சில ஆட்டங்களில் தோற்றுள்ளோம். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எங்கள் பேட்ஸ்மேன்கள் போதுமான அளவுக்கு முயற்சி எடுத்து ஆடவில்லை. பெங்களூர் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் 181 ரன்கள் என்பது வெற்றி பெறக் கூடிய ஸ்கோர்தான். முதல் 6 ஓவர்களில் பெரிய அளவில் விக்கெட்டுகளை இழக்கா விட்டாலும், ரன்களை குவிக்க தவறி விட்டோம். அப்போது ரன்களை எடுத்திருந்தால் நானும் உத்தப்பாவும் ஆட்டத்தை வெற்றியில் முடித்திருப்போம். சிறப்பாக பந்து வீசிய போதும் துரதிஷ்டவசமாக தோற்று விட்டோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்