முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜூன்.12  - மும்பையில் பலத்த மழை பெய்ததால்  4 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. இதுபற்றி தேசிய துயர் துடைப்பு நிர்வாக அதிகாரி விஜயேந்திர தஹியா கூறியதாவது:

மும்பையில் உள்ள ஸியோன் பகுதியில் பலத்த மழை காரணமாக 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.ஙூ

இந்தியாவில் கட்டிடங்கள் இடுந்து விழுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. கட்டிடப்பணிகளை மேற்பார்வையிடாததாலும், தரமற்ற பொருள்களைக் கொண்டு ஏனோ, தானோ என்று கட்டிடங்களைக் கட்டுவதாலும் கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மும்பையில் தானே பகுதியில் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கட்டிய 8 மாடிக் கட்டிடம் கடந்த ஏப்ரல் மாதம் இடிந்து விழுந்ததில் 74 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்