முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டமாஸ்கஸில் குண்டு வெடித்ததில் 14 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

டமாஸ்கஸ், ஜூன்.12  - சிரியா தலைநகர் டமாஸ்கஸில் நடந்த இரு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 14 பேர் கொல்லப்பட்டனர் என்று செய்திகள் தெரிவித்தன. காவல் நிலையத்தில் குண்டு வெடித்ததில் பல போலீஸார் உயிரிழந்துள்ளனர். டமாஸ்கஸில் உள்ள மர்ஜே சதுக்கத்தில் இரு தற்கொலைப் படையினர் குண்டுகளை வெடித்ததில் 31 பேர் பலத்த காயமடைந்தனர் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

சிரியாவில் பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமை கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதில் பலியாகி உள்ளனர். மனித உரிமைக் கழகம் செயல்படும் இடத்திலும், காவல் நிலையத்திலும் தற்கொலைப் படையினர் குண்டுகளை வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்