முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கைது

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன்.14  - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கைது செய்யப்பட்டுள்ளார். அக்பர் பக்தி என்பவர் கொலை வழக்கு தொடர்பாக முஷாரப்பை, பலுசிஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர். இதையடுத்து இவரை 2 வாரம் காவலில் வைக்குமாறு தீவிரவாத எதிர்ப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே முஷாரப் அவரது பண்ணை வீட்டில் தங்கி இருப்பார்.இதற்கிடையே இஸ்லாமாபாத்திலுள்ள சக்ஸாஸத் என்ற கிராமத்திலுள்ள பண்ணை வீடு சிறையாக அறிவிக்கப்பட்டது. 

முஷாரப் அதிபராக இருந்தபோது, பலுசிஸ்தான் தலைவர்  அக்பர் பக்தி 2006-ம் ஆண்டு கொல்லப்பட்டார். பலுசிஸ்தான் மாகாணத்துக்கு தன்னாட்சி வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அக்பர் பக்தி பிரச்சாரம்செய்து வந்தார். இதையடுத்து இவர் கொல்லப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்