முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன

திங்கட்கிழமை, 17 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

பரேலி, ஜூன்.18  - பதேகஞ்ச் பசிமி அருகே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் மொரதாபாத்-பரேலி இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. 

ரோதக்கிலிருந்து டெல்லி செல்லும் இந்த ரயிலின் 4 பெட்டிகளும் பிதுரா ரயில் நிலையம் அருகே  தடம் புரண்டன என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். டிவிஷனல் ரயில்வே மேலாளர் சுனில் மாத்தூர் அங்கு நிவாரணக் குழுவுடன் சென்று பணிகளை மேற்கொண்டார். ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, சத்யகார் எக்ஸ்பிரஸ், நச்சண்டி எக்ஸ்பிரஸ்  ஆகியவை மொரகாபாத்துக்கும், பரேலிக்கும் இடையே நின்றன. 

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அப்புறப்பட்டதும், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்  ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை  மேற்கொள்ளப்படும்  என்று மாத்தூர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்