முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது: நிதீஷ்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூன். 22 - பீகார் முதல்வர் நிதீஷ்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  எப்போதுமே எந்த ஒரு விஷயத்திற்கும் பிரிவினை ஏற்படுத்துவோரை நாம் ஏற்றுக் கொள்ள கூடாது. அத்தகையவரை நாம் புறக்கணிக்க வேண்டும். நமக்கும் நாட்டுக்கும் ஒற்றுமை ஏற்படுத்துபவரே நமக்கு தேவை. இதை நான் வலியுறுத்தும் போதெல்லாம் என்னை சந்தர்ப்பவாதி என்கிறார்கள். என் மீது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. 

பா.ஜ.க தனது கொள்கைகளை மாற்றியிருக்கிறது. மேலும் அது திசைமாறி போகிறது. எனவே அதனை நாம் புறக்கணித்து விட வேண்டியதுதான். வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்காது. அதை போல காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. மாநில கட்சிகளின் துணை இல்லாமல் மத்தியில் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்