முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானை முதலில் பழி தீர்ப்போம் - தலிபான் தீவிரவாதிகள்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மே.4 - அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து தலிபான் தீவிரவாதிகள் அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் பழி வாங்குவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் பாகிஸ்தானை முதலில் பழி தீர்க்கப் போவதாகவும், பிறகுதான் அமெரிக்காவை 2வதாக தாக்கப் போவதாகவும் தலிபான்கள் மிரட்டியுள்ளனர். இவர்களுடைய கொலை பட்டியலில் பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி மற்றும் பாகிஸ்தானின் முக்கிய தலைவர்கள் பலரும் இருக்கிறார்களாம். இதனால் பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள் கலங்கிப் போயிருக்கிறார்கள். 

உலகையே அச்சுறுத்திய அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் நேற்று முன்தினம் பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படையின் சீல் என்ற கமாண்டோ படைப் பிரிவு இந்த தாக்குதலை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. 2001 ம் ஆண்டு அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய போது பின்லேடன் ஆப்கானில் இருந்தார். அமெரிக்கா தேடுதல் வேட்டையை தொடங்கியதும் ஆப்கான் எல்லையில் உள்ள மலைக் காடுகளுக்குள் சென்று பதுங்கி கொண்டான். சாட்டிலைட் உட்பட பல நவீன கருவிகளை பயன்படுத்தியும் பின்லேடனின் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. 

10 ஆண்டு காலமாக இடைவிடாத தேடுதல் வேட்டை காரணமாக அமெரிக்க ராணுவம் சோர்ந்து போய் இருந்தது. இந்த நிலையில் பின்லேடனுக்கு பாகிஸ்தானும், அந்நாட்டு உளவுத் துறையும் எல்லா வகையிலும் உதவி செய்து கொண்டிருப்பதை அமெரிக்கா கண்டுபிடித்தது. பின்லேடனுக்கு வந்த ரகசிய கூரியர் மூலம் பாகிஸ்தானுக்குள்தான் பின்லேடன் இருக்கிறார் என்பது உறுதியானது. இதையடுத்து பாகிஸ்தானிடம் சொல்லாமலேயே அமெரிக்கா தன்னிச்சையாக தேடுதல் வேட்டையை நடத்தியது. பின்லேடன் அபோதாபாத் நகரில் தனி பங்களாவில் தங்கியிருப்பதை கடந்த மாதம் அமெரிக்க உளவுத் துறை கண்டுபிடித்தது. இதையடுத்து அமெரிக்காவின் சீல் படை சிறப்பு பயிற்சிகள் எடுத்து பின்லேடனை கச்சிதமாக தீர்த்துக்கட்டியது. பின்லேடன் திடீரென கொல்லப்பட்ட சம்பவம் அல்கொய்தா தலிபான் தீவிரவாதிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பின்லேடன் கொல்லப்பட்டால் அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று முன்பு தலிபான்கள் கூறியிருந்தனர். ஆனால் அத்தகைய தாக்குதல் எதுவும் தலிபான்கள் நடத்தவில்லை. தலிபான்களின் செய்தி தொடர்பாளர் அசனுல்லா அசன் நேற்று பாகிஸ்தான் பத்திரிக்கை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பின்லேடன் மரணத்திற்கு நிச்சயம் நாங்கள் பழிக்குப்பழி வாங்குவோம். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவோம். பாகிஸ்தானே இனி எங்களின் முதல் எதிரி நாடாகும். அமெரிக்கா கூட பிறகுதான். இந்த இரு நாடுகளுக்கும் பாடம் புகட்டுவோம். அமெரிக்காவை 2 வதாக குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என்று தொலைபேசியில் கூறினாராம். பாகிஸ்தான் தலைவர்களும், ராணுவ அதிகாரிகளும் எங்கள் கொலை பட்டியலில் உள்ளனர். அதில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரி முதலிடத்தில் உள்ளார். அவரை விரைவில் கொல்வோம். 

2007 ம் ஆண்டு பெனாசிர் பூட்டோவை கொல்ல திட்டமிட்டோம். அவரை மூன்று மாதத்தில் முடித்து விட்டோம். ஆனால் அமெரிக்காவால் 10 ஆண்டுகள் போராடித்தான் எங்கள் தலைவரை கொல்ல முடிந்தது. எனவே அமெரிக்கர்கள் இதை கொண்டாடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago