முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க கோரிக்கை

புதன்கிழமை, 4 மே 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,மே.4 - பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும். அதற்கான நேரம் இதுதான் என்று பிரபல இந்தியாவில் பிறந்த எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கூறிய அவர், பின்லேடன் எங்கிருக்கிறான் என்பது எங்களுக்கு தெரியாது என்று பாகிஸ்தான் இதுவரை கூறி வந்தது. ஆனால் இப்போது பாகிஸ்தானில்தான் அவன் கொல்லப்பட்டிருக்கிறான் என்று கூறினார். பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றன. இது குறித்து கூறிய சல்மான் ருஷ்டி, பாகிஸ்தான் இனிமேல் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த உலகத்தின் கேள்விகளுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் தெரிவித்தார். அவ்வாறு கேட்கப்படும் கேள்விகளுக்கு பாகிஸ்தான் பதிலளிக்கா விட்டால் அந்த நாட்டை பயங்கரவாத நாடு என்று அறிவிக்க வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது என்றும் சல்மான் ருஷ்டி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்