முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஷிண்டே பார்த்தார்

சனிக்கிழமை, 22 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஜூன். 23 - உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஆறுதலும் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 

இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். மேலும் இம்மாநிலத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர் இந்த பிரச்சினையை அரசியல் கட்சிகள் அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதனிடையே இம்மாநிலத்தில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் அங்குள்ள மக்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள். அதற்கு தகுந்தார்ப்போல் அங்கு கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுகிறதாம். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மழை வேண்டாம் என்று கோரி அவர்கள் வழிபாடு நடத்தி கொண்டிருக்கிறார்களாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago