முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் போலீஸ் உள்பட 4 பேர் பாலியல் பலாத்காரம்

சனிக்கிழமை, 22 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.23  - டெல்லியில் போக்குவரத்து காவல் துறை தலைமைக் காவலரும், ம் 17 வயதான பள்ளி மாணவியும், மேலும் 2 பெண்களும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். 

தற்போது டெல்லி மாநகரம் பாலியல் பலாத்காரத்துக்கு பேர் போனதாக உள்ளதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் சிங்கப்பூர் மருத்துவவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி  இறந்தார். டெல்லியில் பாலியல் பலாத்கார  சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

டெல்லியில் 17 வயது சிறுமியை 3 பேர் கொண்ட கும்பல் ஜாபராபாத்தில் உள்ள ரெஸ்டாரண்டில் பாலியல்  பாலியல் பலாத்காரம் செய்தது. இவர்கள் 3 பேரும் அந்த சிறுமிக்குத் தெரிந்தவர்கள். உமர், பெரோஸ், சல்மான் ஆகிய மூவரும் இந்த படுபாதகச் செயலில் சம்பந்தப்பட்டவர்கள். இவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 3 பேர் மீதும் பாலியல் பலாக்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

   இதே பகுதியில் வசித்து வரும் இந்த மாணவி அரசு நடத்தி வரும்  பள்ளியில் 8-ம் வகுப்புப் படித்து வருகிறார். இவர் மார்க்கெட் பகுதிக்குச் சென்றபோது உமரை சந்தித்துள்ளார். அப்போது உமர் இந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, ரெஸ்டாரண்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இவரது நண்பர்கள் இருவரும் இவர்களுக்காகக் காத்திருந்தனர். 

இவர்கள் 3 பேரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமுற்ற அவர்கள் சிறுமியை அடித்து உதைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி யாரிடமாவது கூறினால் கொன்று விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர் என்று அந்த சிறுமி கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.

பின்னர் வீட்டுக்குச் சென்ற சிறுமி ரெஸ்டாரண்டில் அவளுக்கு நடந்த கொடுமைகள் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். போலீஸார் அவளை அழைத்துச் சென்று மருத்துப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ சோதனை அறிக்கையில் அந்த சிறுமி பாலியல் பலாக்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று அந்த போலீஸ் அதிகாரி கூறினார் .

டெல்லி சீமாபுரியில் 13 வயது சிறுமி, அவளது நண்பரால் பாலியல் பலாக்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக இம்ரான் என்பவர் கைது செய்யப்பட்டார். 

     7-ம் வகுப்புப் படித்து வரும்இந்த சிறுமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது இம்ரான் வீட்டுக்குள் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அவரது நண்பர்கள் இருவர் உதவியுள்ளனர். இதுபற்றி அந்த சிறுமி கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் இம்ரானையும், அவனது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.

   33 வயதான டெல்லி போக்குவரத்துக் கழக தலைமைக் காவலர் ஒருவரை நிலச்சுவான்தார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி அந்த பெண் போலீஸ் சகர்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் அவர் கூறியள்ளதாவது:

தயாள்புரியில், மகராஜ் என்பவரது பண்ணை வீட்டில் வசித்து வருகிறேன். மகராஜ் கடந்த 4 ஆண்டுகளாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார் என்றும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

சகேத் பகுதியில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி 27 வயது பெண்ணை வீரேந்திர குமார் என்பவர்  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகாரின்பேரில் இவரை போலீஸார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான அந்த இடத்தின் உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்