முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த பாக். அரசு முடிவு

சனிக்கிழமை, 22 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன். 23 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீதான தேச துரோக வழக்கை தொடர்ந்து நடத்துவது என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஒருவர் அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் தேச துரோக வழக்கு விசாரணையை எதிர்கொள்ளப் போகும் முதல் சர்வாதிகாரி முஷாரப்தான். 

முஷாரப் மீதான வழக்கு விசாரணைக்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும் என நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பு கூறியிருந்தார். அவரது கருத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைச்சர் ஒருவரும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு பலுசிஸ்தான் தேசியவாத கட்சி தலைவர் அக்பர் பக்டி கொலை வழக்கு மற்றும் 2007 ம் ஆண்டில் அவசர நிலைமை பிரகடனம் செய்து நீதிபதிகளைகைது செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் முஷாரப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகு முஷாரப் லண்டனில் வசித்து வந்தார். வழக்கு விசாரணைக்காக அவரை நாடு கடத்துமாறு விடுத்த பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை பிரிட்டன் ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பங்கேற்பதற்காக முஷாரப் ஜாமீன் பெற்று நாடு திரும்பினார். ஜாமீன் முடிந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது. 

இதற்கிடையே முன்னாள் அட்டர்னி ஜெனரல் இர்பான் காதிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் முஷாரப் மீதான தேச துரோக வழக்கை தொடர்ந்து நடத்த இடைக்கால அரசு விரும்பவில்லை என கூறியிருந்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசு இது குறித்து முடிவு செய்யும் எனவும் கூறியிருந்தார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்போதைய அட்டர்னி ஜெனரல் முனீர் மாலிக் முஷாரப்பை சந்தித்து பேசினார். முஷாரப் மீதான தேச துரோக வழக்கில் 24 ம் தேதி விசாரணை நடைபெறவுள்ள நிலையில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. முஷாரப் மீதான தேச துரோக வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தினால் அரசுக்கும், ராணுவத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் என தெரிகிறது. ஏனென்றால் முன்னாள் ராணுவ தளபதியான முஷாரப் தண்டிக்கப்படுவதை ராணுவம் விரும்பாது என்று கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago