முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சீனிவாசன் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.24 - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக  மீண்டும் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று காலை நடந்த கிரிக்கெட் வாரிய சங்க கூட்டத்தில மீண்டும் சீனிவாசன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

ஐ.பி.எல் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் சீனிவாசன்  மருமகன் குருநாத் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதனால் கிரிக்கெட் வாரிய பதவியிலிருந்து சீனிவாசன் ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக ஜெக்மோகன் டால்மியா தேர்வு செய்யப்பட்டார்.

ஒரு சில மாதங்கள் தான் அவர் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் மீண்டும் நேற்றைய தினம் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சீனிவாசன் தலைவராக வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

இதனால் மீண்டும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகிறார் சீனிவாசன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்