முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தலுக்குப்பின் நிதிஷ் அம்போ: ராஜ்நாத் தாக்கு

திங்கட்கிழமை, 24 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

பாட்னா,ஜூன்.25 - வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் காணாமல் போய்விடுவார், அவரது கட்சியும் மண்ணைக்கவ்வும் என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். குஜராத் முதல்வர் மோடிக்கு பா.ஜ.க. வில் தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து அந்த கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது. பிகார் மாநிலத்தில் பா.ஜ.க அமைச்சர்கள் 11 பேரை அதிரடியாக நீக்கினார் நிதிஷ். இதன்பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவில் வெற்றி பெற்றார். இதறகிடையில் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் பாஜக விற்கு கட்சி தாவியுள்ளனர். இது நிதிஷுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே பிகாரில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பாஜ தலைவர்கள் அனைவரும் நிதிஷை நம்பிக்கை துரோகி, சந்தர்ப்பவாதி, மோசடிக்காரர் என கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த கூட்டத்தில் பேசிய தலைவர் ராஜ்நாத்சிங் குறிப்பிடுகையில், வரும் மக்களவை மற்றும் பிகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் மண்ணைக்கவ்வும் . காங்கிரசை நெருங்கும் கட்சிகளுக்கு இந்த கதிதான் ஏற்படும், உலகமே பாராட்டும் அளவிற்கு குஜராத் மாநிலத்தில் வளர்ச்சியை உருவாக்கியுள்ளமோடி மீது என்ன கோபம் நிதிசுக்கு. 2014-ல் வெற்றியை தேடித்தருவார் என்றுதான் அவரை பிரச்சாரக்குழு தலைவராக பா.ஜ.க. நியமித்துள்ளது. ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள நீங்கள் காங்கிரசை நாடியுள்ளீர்கள். இதுதான் நீங்கள் செய்த இமாலயத்தவறு. உங்கள் கதை முடிந்து விட்டது. உங்களது அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து விட்டது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்