முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரிசாபாத்தில் சிறுமி கற்பழிப்பு: ஒருவர் கைது

புதன்கிழமை, 26 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

பரிதாபாத், ஜூன்.27  - பரிசாபாத்திலுள்ள ராஜீவ் காலனியில் மூன்றரை வயது சிறுமியை கற்பழித்ததாக சுனில் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்த சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த சுனில் இந்த சிறுமியை தூக்கிச் சென்று கற்பழித்துள்ளான்.

இதையடுத்து இந்த சிறுமி கூச்சலிட்டாள். தனது பேத்தியின் அலறல்கேட்டு அங்கு வந்த சிறுமியின் பாட்டி இந்த வீட்டுக்கு வந்து சிறுமியை மீட்டாள். அப்போது சுனில் குடிபோதையில் இருந்தான் என்று போலீஸார் தெரிவித்தனர். கற்பழித்த பிறகு சிறுமியை கொன்று விடுவதாகவும் மீரட்டியுள்ளான். பின்னர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுனிலை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்