முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துனிசியா நாட்டு சிறைகளில் இருந்து 800 கைதிகள் தப்பியோட்டம்

புதன்கிழமை, 4 மே 2011      உலகம்
Image Unavailable

 

துனிஷ்,மே.4 - ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அதிபர் பொன்அலிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். போராட்டத்தின் போது சிறைகளில் இருந்த சுமார் 11 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடி விட்டனர். 

பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். கடும் எச்சரிக்கைக்கு பின்னர் மேலும் 2 ஆயிரம் பேர் தானாக சரணடைந்தனர். அதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. துனிசியாவின் மத்திய மேற்கு பகுதியில் கஸ்கரின் என்ற இடத்தில் மத்திய சிறை உள்ளது. இங்குள்ள 2 கைதிகள் அறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

எனவே தீயை அணைக்கும் பணியில் சிறை கைதிகள் ஈடுபட்டனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு 522 கைதிகள் அங்கிருந்து தப்பி விட்டனர். கஸ்கானில் இருந்து 150 கி.மீ தூரத்தில் காப்சா என்ற இடத்தில் மற்றொரு சிறை உள்ளது அந்த சிறையை உடைத்து 300 கைதிகள் தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்