முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் குகை கோயிலுக்கு செல்ல பெயர் பதிவு ஆரம்பம்

புதன்கிழமை, 4 மே 2011      ஆன்மிகம்
Image Unavailable

ஜம்மு,மே.4 - அமர்நாத் சிவன் குகைக்கோயிலுக்கு யாத்திரை செல்பவர்கள் பெயர்கள் வரும் 10-ம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று கோயில் அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. அமர்நாத்தில் பனி லிங்க கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு இந்துக்கள் வருடந்தோறும் லட்சக்கணக்கில் சென்று வருவார்கள். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வரிசைப்படிதான் அனுப்பப்படுவார்கள். பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் கோயிலுக்கு யாத்திரை செல்லும் பயணிகள் தங்களுடைய பெயர்களை வாரியத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்து கொள்ளும் பணி வரும் மே மாதம் 10-ம் தேதி முதல் ஆரம்பமாகும் என்று வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.கே.கோயல் நேற்று ஜம்முவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். பதிவு செய்வதற்கு ஜம்மு-காஷ்மீர் வங்கியின் 121 கிளைகளிலும் யெஸ் வங்கியின் 24 கிளைகளிலும் 4 மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் கவுண்டர்கள் திறக்கப்படும் என்று கோயல் மேலும் கூறினார். அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்