முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 2 இளைஞர்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஜூலை. 1 - ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்பூரா மாவட்டத்தில் சம்பல் பகுதியில் நேற்று அதிகாலையில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராணுவ துப்பாக்கிச்சூட்டில் 2 இளைஞர்கள் பலியானது துரதிஷ்டவசமான ஒரு சம்பவம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் முகமது அக்பர் குறிப்பிட்டார். 

பலியான இளைஞர்கள் இர்பான் அகமது, இர்ஷாத் அகமது என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். அந்த பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவலையடுத்து ராணுவம் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில்தான் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்