முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோயிலில் பஞ்சாப் கவர்னர் சாமி தரிசனம்

புதன்கிழமை, 4 மே 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி,மே.4 - பழனி முருகன் மலைக் கோயிலில் பஞ்சாப் கவர்னர் சாமி தரிசனம் செய்தார். பழனி முருகன் மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் உள்துறை அமைச்சரும், பஞ்சாப் மாநில கவர்னருமான சிவராஜ் பாட்டீல் பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் பழனியாண்டவர் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார். அவருடன் அவரது மகன் சைலேஷ் பாட்டீலும் வந்திருந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கணேசன், மாவட்ட எஸ்.பி. சந்திரசேகரன், ஆர்.டி.ஓ. வேலுச்சாமி, தாசில்தார் பிச்சைமணி, கோயில் நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

பின்னர் கவர்னர் பழனி மலைக் கோயிலுக்கு வந்தார். முருகப் பெருமானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்