எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.10 - தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தின் விபரம் வருமாறு:-
இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் 21 பேரை பகிரங்கமாகவும் சட்டவிரோதமாகவும் கடத்திச் சென்று காவலில் வைத்துள்ள மற்றுமொரு கொடிய செயல் குறித்து உங்கள் கவனத்திற்கு நான் கொண்டு வர விழைகிறேன். இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 21 மீனவர்கள் 6.7.2013 அன்று இரவு IND/TN/10/MM/474, IND/TN/10/MM/302, IND/TN/11/MM/117,IND/TN/11/MM/259, IND/TN/10/MM/008 ஆகிய பதிவெண்கள் கொண்ட ஐந்து படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற போது, நடுக்கடலில் அவர்கள் அனைவரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் 19.7.2013 ஆம் நாள் வரையில் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இலங்கை கடற்படையினர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏதுமறியா மீனவர்களை நடுக்கடலில் எவ்வித காரணமுமின்றி தாக்குவது, கடத்திச் செல்வது மற்றும் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது பற்றி நான் தங்களுக்கு மீண்டும் மீண்டும் கடிதம் எழுதிவந்துள்ளேன். 5.6.2013 அன்று 10 படகுகளில் சென்ற 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். சட்டவிரோமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின்னர் இவர்களில் 24 மீனவர்கள் 2.7.2013 அன்றும், எஞ்சியிருந்த 25 மீனவர்கள் 3,7,2013 அன்றும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு படகுகளில் சென்ற மற்றுமொரு 8 மீனவர்கள் 15.6.2013 அன்று கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் இந்நாள் வரையிலும் வாடிவருகின்றனர். இவை தவிர, ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டு, 29.11.2011 ஆம் நாளிலிருந்து இலங்கை நீதித்துறை காவலில் இருந்து வருகின்றனர். இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் ஒரு பகுதியாக கச்சத்தீவை எனது அரசு எப்போதும் கோரி வரும் இச்சூழலில், அவர்களை கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லாமல் தடுக்கும் வகையில் அச்சுறுத்தும் நோக்கில் ஏதுமறியாத, ஆயுதமற்ற இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், இத்தகைய கடுமையான வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய காரணமற்ற இலங்கை கடற்படையினரின் வன்முறை செயல்களுக்கு துரதிருஷ்டவசமாக இந்திய அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வெறுமனே இருந்து வருகிறது. இது நிலைமையை மேலும் மோசமாக்குவதோடு, தமிழ்நாட்டில் மீனவ சமுதாயத்திற்கிடையே அதிக பதற்ற நிலையை உருவாக்கும்.
எனது 17.6.2013 ஆம் நாளிட்ட கடிதத்தில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டியுள்ளவாறு, வெளிவிவகாரத் துறை அமைச்சகம் தொடர்ந்து எதையும் பொருட்படுத்தாமல், அக்கறையின்று மெளனம் சாதித்து வருகிறது. வேதனையான இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தவொரு முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை. இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு மீனவர்களை அதிலும் குறிப்பாக அண்மைக் காலங்களில் கைது செய்யும் இத்தகைய எண்ணற்ற நேர்வுகளுக்கு மத்.ய அரசின் உயர் நிலை அளவில் வலுவான, ஒருங்கிணைந்த விவேகமான பதிலடி கொடுப்பது அவசியமாகும். எனவே, இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் ஏதுமறியா இந்திய மீனவர்கள் மீது காரணமின்றி தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு புதுடில்லியிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியை அழைத்து அவர் வாயிலாக இலங்கை அரசுக்கு வலுவாலன ஆலோசனை வழங்குமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மீனவர்களை, காவலிலிருந்து உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்துமாறும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.