முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டியை இரவில் நடத்த தடை விதிக்கக்கோரி வழக்கு

வியாழக்கிழமை, 5 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.5 - தமிழகத்தில் கடும் மின்தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பகல்-இரவு ஆட்டமாக நடத்துவதால் கூடுதல் மின்சாரம் செலவாகிறது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என வக்கீல் கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:​ 

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பகல்​இரவு ஆட்டமாக நடந்து வருகிறது. இதற்கு அதிகளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே மின்சார தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த போட்டி பகல்​இரவு ஆட்டமாக நடப்பதால் கூடுதல் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே இந்த போட்டியை பகலில் நடத்த உத்தரவிட வேண்டும். 

மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். இதன் மூலமாக ஐ.பி.எல். போட்டி மூலம் அரசுக்கு 23 சதவீத கேளிக்கை வரி வருமானமாக கிடைக்கும். 

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனு nullநீதிபதிகள் தனபாலன், ஆறுமுகசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜுன் 7​ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசு, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். நிர்வாகம் ஆகியவற்றிற்கு நோட்டீசு அனுப்ப nullநீதிபதிகள் உத்தரவிட்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்