முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோனிக்கு எதிர்ப்பு - பசுமை தாயகத்தினர் 40 பேர் கைது

வியாழக்கிழமை, 5 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.5 - கிரிக்கெட் வீரர் தோணி​மதுபான விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று பா.ம.க.வின் பசுமை தாயத்தினர் தோனி தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி விளையாட்டு மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இது தவிர விளம்பர படங்களில் நடிப்பதால் மேலும் கோடிக்கணக்கில் பணம் குவிகிறது. மதுபான விளம்பரங்களிலும் தோனி நடித்துள்ளார். அவர் மதுபான விளம்பரங்களில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். 

மதுபான விளம்பரத்தில் இருந்து டோனி விலக வலியுறுத்தி பசுமை தாயகத்தினர் நேற்று அடையார் நட்சத்திர ஹோட்டல் முன்பு திரண்டனர். அங்கு தங்கி இருந்த டோனிக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பசுமை தாயக மாநில செயலாளர் இரா.அருள் உள்பட 40 பேரை கைது செய்தனர். அவர்களை தியாகராயநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்