எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை. 11 - காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தொடர்ந்து கர்நாடகம் மறுத்து வருவதால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை கடந்த 5.2.2007 ல் வெளியிட்டது. தீர்ப்பு விபரம் கடந்த 19.2.2013 ல் மத்திய அரசின் கெஜட்டில் வெளியானது. இதையடுத்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அமலுக்கு வந்துள்ளது. இதை கண்காணிக்க காவிரி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அதிகாரி தலைவராக இருப்பார். இதில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில உயரதிகாரிகளும் வேளாண்மை நிபுணர்களும் இடம் பெறுவர்.
பிரச்சினைகள் ஏற்படும் போது இந்த குழு கூடி பிரச்சினைகள் குறித்து பேசி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கும் என்பது தீர்ப்பின் முக்கிய அம்சம். ஆனால் மத்திய அரசு 2 குழுக்களையும் அமைக்கவில்லை. இக்குழுக்களை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மத்திய அரசு இரு குழுக்களையும் அமைக்கும் வரை தற்காலிக மேற்பார்வை குழு அமைக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த மே 24 ம் தேதி தற்காலிக மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. ஜூன் மாத தொடக்கத்தில் மேட்டூர் நீர் மட்டம் மிக குறைவாக இருந்த நிலையில் அந்த மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடும்படி தமிழகம் கர்நாடகாவிடம் கேட்டது. ஆனால் கர்நாடகம் மறுத்து விட்டது.
இந்நிலையில் ஜூன் 1 மற்றும் 12 தேதிகளில் காவிரி மேற்பார்வை குழு டெல்லியில் கூடியது. இரு கூட்டங்களிலும் கர்நாடகம் தண்ணீர் விட மறுத்து விட்டது. மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட தற்காலிக குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அடித்துக் கூறியது கர்நாடகம். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை அமைக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு ஜூலை 1 ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி அல்தமாஸ் கபீர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து வரும் 12 ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
எனவே தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுமா என்பது நாளை தெரியவரும். காவிரி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான் காவிரி இறுதி தீர்ப்புப்படி தமிழகத்திற்கு ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய 192 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து டெல்டாவின் தேவையை சமாளிக்க முடியும். இந்நிலையில் வரும் 15 ம் தேதி காவிரி மேற்பார்வை குழுவின் 3 வது கூட்டம் டெல்லியில் கூடுகிறது. கூட்டத்தில் பங்கேற்கும்படி தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் அலோக்ராவத் கடிதம் அனுப்பி உள்ளார். இவர் கடந்த 1 ம் தேதிதான் நீர்வள துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்த கூட்டத்திலும் தமிழகம் சார்பில் கடந்த மாதத்தில் தர வேண்டிய 10 டி.எம்.சி. தற்போது தர வேண்டிய 34 டி.எம்.சி. தண்ணீரை தரும்படி மீண்டும் வலியுறுத்தப்படும் என தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.