முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் யானை தாக்கியதில் தேர்தல் அதிகாரி சாவு

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூலை.13  - மேற்கு வங்காள மாநிலத்தில் யானை தாக்கியதில் தேர்தல் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். பங்குரா மாவட்டத்தில், போர்ஜோரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேற்கு வங்காள மாநிலத்தில் ஊராட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜல்பைகுரி மாவட்டத்தில், பானுநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிரன் சேத்ரி. இவர் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றினார். போர்ஜோரா பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் பணியாற்றிவிட்டு இரவு 2 மணிக்கு வீடு திரும்பிய இவரை யானை விரட்டியது.

யானைக்கு ஈடுகொடுத்து அவரால் ஓடமுடியவில்லை. பின்னர் யானை தும்பிக்கையால் தூக்கி வீசியதில் கிரன் சேத்ரி உயிரிழந்தார். இதையடுத்து இவரது சடலம் பங்குரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago