முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் காபி ஷாப்பில் குண்டு வெடித்து 38 பேர் பலி

சனிக்கிழமை, 13 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

பாக்தாத், ஜூலை. 14 - ஈராக்கின் பாக்தாத் நகருக்கு வடக்கே 290 கி.மீ. தொலைவில் உள்ளது கிர்குக் நகரம். இங்கு பல்வேறு இன மக்களும் வசிக்கின்றனர். தற்போது ஈராக் முழுவதும் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. சிறப்பு தொழுகை முடிந்து ஏராளமானோர் தங்களது நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக கிர்குக் நகரில் கிளாசிகோ கபே என்ற காபி ஷாப்பில் திரண்டனர். அப்போது திடீரென தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் குண்டுவெடிப்பில் சிக்கினர். சம்பவ இடத்திலேயே 38 பேர் உடல் சிதறி பலியாயினர். 24 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்