முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூடானின் அடுத்த பிரதமருக்கு மன்மோகன்சிங் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.15 - பூடானின் அடுத்த பிரதமராக இருக்கும் தோப்கேவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். பூடான் நாட்டில் தேசிய சட்டசபைக்கு(பாராளுமன்றத்துக்கு) நடந்த தேர்தலில் அந்நாட்டின் எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அக்கட்சி தலைவரான தோப்கே அடுத்த பிரதமராக பதவியேற்கவிருக்கிறார். அவருக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்து செய்தி அனுப்பி உள்ளார். மேலும் பூடானுக்கு திட்ட உதவி வழங்குவதற்கு தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். 

தோப்கே பிரதமராவதன் மூலம் இரு நாடுகளிடேயே ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்றும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்தியாவுக்கு வருமாறும் அவர் தோப்கேவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மக்கள் ஜனநாயக கட்சிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா பூடானின் ஒரு சிறந்த கூட்டாளி. அதன் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் இந்தியா உதவும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் இரு தரப்பு உறவு மென்மேலும் மேம்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்