முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோர்ஜி காண்டூவின் மறைவு மிகப்பெரிய இழப்பு - பிரதமர்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.6 - அருணாசலப்பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணமடைந்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டோர்ஜி காண்டூவின் துணைவியாருக்கு அவர் ஒரு செய்தி அனுப்பி உள்ளார். அந்த செய்தியில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதாவது:-

காண்டூவின் மறைவு மூலம் அருணாசலப்பிரதேசம் மட்டுமின்றி இந்த நாடே ஒரு அனுபவம் உள்ள திறமை வாய்ந்த தலைவரை இழந்துவிட்டது. பொதுச்சேவையில் பல ஆண்டு காலம் அர்ப்பணிப்போடு பணியாற்றியவர் அவர். மாநிலத்தின் நன்மைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஓய்வின்றி உழைத்தவர் அவர். அடிமட்ட அளவில் தனது ஆரம்ப காலத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர். 1990-ல் அருணாசல சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு புதிய தெம்போடும் உத்வேகத்தோடும் அருணாசலப்பிரதேச வளர்ச்சிக்காக பணியாற்றினார். அமைச்சரவையில் பல்வேறு பணிகளை வகித்தவர். அருணாசலப்பிரதேசத்தின் 5-வது முதல்வராக அவர் நியமிக்கப்பட்ட பிறகு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மேலும் ஆர்வமாக பணியாற்றியவர். இவ்வாறு அந்த இரங்கல் கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். இன்று காண்டூவின் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி செலுத்துகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்