எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,மே.6 - கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகிறார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்தது தெரிந்ததே. இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. ரூ. 1.76 லட்சம் கோடி என்று தணிக்கை துறை அதிகாரி தெரிவித்தது தெரிந்ததே. இந்த வழக்கு தொடர்பாக இன்று 6 ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை தி.மு.க. எம்.பியுமான கனிமொழிக்கு மத்திய புலனாய்வு துறையை போல, அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் மேலும் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி எம்.பி. இன்று ஆஜராகிறார். இதற்காக நேற்று முன்தினமே அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று ஆஜரான பிறகு அவர் கைதாகக் கூடும் என்று பரவலாக பேசப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குனர் கரீம் மொராணி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துக்கள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளனர்.
2 ஜி ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினியுக் நிறுவனத்தின் வழியாக கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரிப்பார்கள் எனத் தெரிகிறது.
இந்த வழக்கை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சி.பி.ஐ. அமைப்பும் விசாரித்து வருகிறது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் நாட்டுக்கு ரூ. 30,984 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தனது முதல் குற்றப்பத்திரிக்கையில் கூறிய சி.பி.ஐ., முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா, ராசாவின் தனிச் செயலர் சந்தோலியா உள்ளிட்டோர் மீதும் ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறது. இதன் பிறகு கடந்த ஏப்ரல் 25 ம் தேதி தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிக்கையில் 2 ஜி முறைகேடு தொடர்பான சதியில் உடந்தையாக இருந்ததாக கனிமொழி மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. சரத்குமார், மொரானி உள்ளிட்ட 5 பேரின் பெயர்களும் துணை குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்தன.
இவர்கள் 5 பேரும் 6 ம் தேதியன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி. சைனி அப்போது உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இவர்கள் 5 பேருக்கும் அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பி உள்ளது. ஒரு வேளை இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு அதனால் இவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில் இவர்களிடம் ஆய்வு செய்வதற்கு அமலாக்கத்துறை கோர்ட்டில் அனுமதி கோரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முன் ஜாமீன் கோரி சினியுக் நிறுவன இயக்குனர் மொரானி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க டெல்லி ஐகோர்ட் மறுத்து விட்டது. விசாரணை நீதிமன்றத்திலேயே இந்த மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இதற்கிடையில் அரசியல் தரகர் நீரா ராடியா சார்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு பத்திரிக்கையாளர் ஒருவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாகவும் மத்திய புலனாய்வு துறை பூர்வாங்க விசாரணையை தொடங்கியிருக்கிறது. ஆனால் பத்திரிக்கையாளர் உபேந்திரா ராயும், நீரா ராடியாவும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். ஆனால் அமலாக்கப்பிரிவு துறையோ இது தொடர்பாக சி.பி.ஐ. யில் ஒரு புகார் கொடுத்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் அது கேட்டுள்ளது. முன்னதாக பத்திரிக்கையாளர் உபேந்திரா ராய், அமலாக்கப் பிரிவின் உதவி இயக்குனர் ராஜேஸ்வர் சிங் என்பவரை சந்தித்து அவருக்கு ரூ. 2 கோடி கொடுக்க முன்வந்தாராம். ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைப்பதற்காக இப்படி கொடுக்க அவர் முயன்றாராம். இது தொடர்பாகவும் விசாரணை நடக்கவிருக்கிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. இன்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராகவிருக்கிறார். அப்போது கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் குறித்து அவரிடம் கேள்விக் கணைகள் தொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் கருணாநிதியின் மகள் கனிமொழியோ நான் நிரபராதி என்று நிரூபிப்பேன் என்று கூறியிருக்கிறார். இன்று ஆஜரான பிறகு அவர் கைது செய்யப்படுவாரா அல்லது மாட்டாரா என்பது தெரிந்து விடும். இந்த கேள்விக்கு விடை காண தமிழக மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க.வோ கலக்கத்துடன் காணப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழிக்காக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்களோடு தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினாராம். அப்போது சட்ட நிபுணர்களும் சில அரசியல் தலைவர்களும் அவருக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறியதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.