முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ராணுவம் தாக்குதல்: பாதுகாப்புப் படை வீரர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, ஜூலை.29 - ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் , கதுவா மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார். இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி செயல்பட்டு வருகிறது. இபாகிஸ்தான் ராணுவம் கையெறி ராக்கெட் குண்டுகள், இயந்திர துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது என்று ராணுவம் மற்றும்  எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். 5 முறை போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. கதுவா மாவட்டத்தில் சிறிய அளவில் துப்பாக்கி சண்டை நடந்தது என்று எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்திய நிலைகளை குறிவைத்தே பாகிஸ்தான் செயல்படுகிறது.

பாகிஸ்தானின் இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருவதை கண்காணித்து வருவதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பூஞ்ச் பகுதியில் உள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.      

     தேவையில்லாமல் இந்திய ராணுவம் தாக்கியதில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்தார் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அசிம் சலீம் பாத்வா கூறினார். ராவ்லகோட் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தேவையில்லாமல் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்