முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி வீட்டில் தொலைபேசி இணைப்பு: விசாரணை முடித்தது

திங்கட்கிழமை, 29 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

சென்னை, ஜூலை 30 - முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சென்னை வீட்டில் முறைகேடாக 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்ததான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை சிபிஐ முடித்துள்ளது.தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டி.வி.க்காக இந்த தொலைபேசி இணைப்புகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன என்பது முக்கியக் குற்றச்சாட்டு.இது தொடர்பாக 2011-ம் ஆண்டில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதா அல்லது வழக்கை முடித்து விடுவதா என்பதை சிபிஐ உயரதிகாரிகள் விரைவில் முடிவு செய்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்