முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்கத்தில் இன்று 5-வது கட்டத்தேர்தல்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,மே.7 - மேற்குவங்க மாநிலத்தில் சட்டசபைக்கு இன்று 5-வது கட்டமாக 34 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. நக்சலைட்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் உள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு நடப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழகம், புதுவை, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களோடு மேற்குவங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம், புதுவை,கேரளம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் முடிந்துவிட்டது. அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. மேற்குவங்கம் மாநிலம் பெரியதாக இருப்பதாலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அந்த மாநிலத்தில் சட்டசபைக்கு 6 கட்டமாக தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. முதல் கட்டமாக 50 தொகுதிகளுக்கும் இரண்டாவது கட்டமாக 54 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக 75 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 4-வது கட்டமாக 63 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதுவரை 242 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இன்று 5 -வது கட்டமாக 35 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தொகுதிகள் உள்ள பகுதிகளில் நக்சலைட்கள்,மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் இருப்பதால் தேர்தலின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் போலீசாருக்கு உதவியாக மத்திய ரிசர்வ் படையினர் அதிக அளவில் அனுப்பப்பட்டுள்ளனர். 34 தொகுதிகளிலும் 292 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சுமார் 75 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்