முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியில் பஸ் கவிழ்ந்து 38 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

ரோம், ஜூலை. 31 - தெற்கு இத்தாலியில் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பஸ் பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்ததில் 38 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். விடுமுறையை கழிப்பதற்காக நேபிள்ஸ் பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்சில் புறப்பட்டு தெர்மல் ஸ்பாலில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள புனித தலங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் மறு நாள் இரவு நேபிள்ஸில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இர்பினியாவின் மான்ட்போர்டி இர்பினோ மலைப் பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியுள்ளது. 

அவ்வழியே சென்று கொண்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இடித்து தள்ளி கொண்டு சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 38 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் படுகாயமடைந்த 11 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பஸ் டயர் வெடித்ததாலேயே விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்