முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் 3 தமிழர்கள் பலி

புதன்கிழமை, 31 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

பஹ்ரைன், ஆக. 1 - பஹ்ரைனில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்த போது விஷவாயு தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியான மூவரின் பெயர் முருகேசன் கோனார்(40), சண்முக ஜெகன்னாதன் (25) மற்றும் பால்ராசு அய்யாக்கண்ணு (23) என்பதாகும். இவர்கள் தெற்கு மனாமா பகுதியில் உள்ள அல்்கர் கிராமத்தில் உள்ள வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ்ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் விஷவாயு தாக்கியது. இதில் உள்ளே இறங்கியிருந்த ஒருவர் மயங்கி விழுந்தார். அவரைத் தொடர்ந்து இருவரும் மயங்கி உயிரிழந்தனர்.

இந்த தகவல் அரசின் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. செப்டிங் டேங்க் தொட்டியில் இறங்கும் போது பாதுகாப்பாக பொருட்களை அணிந்து கொண்டு பணி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்