முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை  ஆக.6 - பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக, வன்கொடுமை சட்டத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை போலீசார் கைது செய்தனர். சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராதாதேவிபிரசாத். இவர், நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். 

அதில், எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திரைப்பட இசையமைப்பாளர் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். இதுபற்றி நீலாங்கரை போலீசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். 

பின்னர் நேற்றுமுன் தினம்  ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை அழைத்து வந்தனர். ஆனால் மாஜிஸ்திரேட்டு இல்லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர். முன்னதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நிருபர்களிடம் கூறியதாவது:- 

என் மீது என்ன வழக்கு போட்டு உள்ளார்கள் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. தீவிரவாதியை கைது செய்வது போல் 40-க்கும் மேற்பட்ட போலீசார் என் வீட்டுக்குள் புகுந்து அழைத்து வந்தனர். 

எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ள பெண், எனது இடத்தை கேட்டார். நான் தரமறுத்துவிட்டேன். என் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர். இதில் முதல்-அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்