முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேரனின் மகள் காதலன் வீட்டிற்கு செல்ல விருப்பம்

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.6 - இயக்குனர் சேரனின் மகள் தாமினி காதலனின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது, காதலன் வீட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்ததை அடுத்த வழக்கு இன்று விசாரனை வர உள்ளது. டைரக்டர் சேரன் மகள் தாமினி மைலாப்பூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தாமினியின் காதலன் சந்துருவின் தாயார் ஈஸ்வரி அம்மாள் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ளும்படி அவர் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார்.

ஐகோர்ட்டு நீதிபதிகள் தனபாலன், சி.பி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் ்ஈஸ்வரி அம்மாள் தரப்பில் வக்கீல் சங்கரசுப்பு ஆஜரானார். வக்கீல் சங்கரசுப்பு நீதிபதிகளிடம் கூறியதாவது:-

திரைப்பட இயக்குனர் சேரன் மகள் தாமினியை வாலிபர் சந்துரு காதலித்தார். சேரன் அடி ஆட்களை அனுப்பி சந்துருவை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். இது குறித்து சேரன் மகள் தாமினி போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் விசாரணை என்ற பெயரில் சேரன் மகள் தாமினியை காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளனர். எனவே, இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் நீதிபதிகளிடம் கூறினார்.

இதை கேட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள், ஈஸ்வரி அம்மாள் தாக்கல் செய்த மனு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும். பிற்பகல் அந்த மனு விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது இயக்குனர் சேரன் மகள் தாமினியை சென்னை ஐகோர்ட்டில் போலீசார் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தர விட்டனர்.

அதன்படி மதியம் 2 மணிக்கு சேரன் மகளை கோட்டிற்கு அழைத்து வந்தபோது காதலனின் வீட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளதால். அதுவும் நீதிபதிகள் அறையில் நடைபெற உள்ளதால் தாமினியை வக்கீல் என்.ஜி.ஆர். பிரசாத் தங்கவைத்து இன்று தாமினியை நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டும் எனவும், ஆகையால் இன்றும் இந்த வழக்கில் விசாரணை நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்