முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்வாகிகள் மறைவிற்கு ஜெயலலிதா இரங்கல்

சனிக்கிழமை, 7 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.7 - நிர்வாகிகள் மறைவிற்கு ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- 

விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் ஒன்றிய இலக்கிய அணி துணைத் தலைவர் ஆர்.விஜயரங்கன் சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் ஒன்றிய  எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளரும், பெரியகோட்டை கிளை செயலாளருமான கே.வேலு,  விருதுநகர் மாவட்டம்,  விருதுநகர் ஒன்றியம், பொம்மையாபுரம் கிளை செயலாளர் எம்.கஞ்சையா, திருநெல்வேலி புறநகர் மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம், புளியரை கிளை செயலாளர் எஸ்.விநோயகம் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டும், மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர்கள் விஜயரங்கன், வேலு, கஞ்சையா மற்றும் விநாயகம் ஆகியோரை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்