முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா - அப்பா - அத்தையை கொன்ற சிறுவன் தற்கொலை

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

சா போலோ, ஆக.9  - வீடியோ கேம் விளையாடி ஹிட் மேனாக வரவேண்டும் என்று கருதிய சிறுவன் தாய், தந்தை, அத்தை உள்பட 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். பிரேசில் நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் வடக்கு சா போலோவைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் மகன் மார்செலோ பெஸ்கினி. பள்ளியில் படித்து வந்த இவன், வீடியோ கேம் விளையாட்டில் ஈடுபாடு கொண்டான். வீடியோ கேமில் வருவதுபோல் துப்பாக்கி சண்டை போட்டு ஹிட் மேனாக வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்தான்.  இவனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அம்மா, அப்பா, அத்தை ஆகியரை சுட்டுக்கொன்றான். பின்னர் பாட்டி வீட்டுக்குச் சென்று பாட்டி, அத்தை ஆகியோர சுட்டுக்கொன்றான்.

மறுநாள் எதுவும் நடக்காததுபோல  பள்ளிக்குச் சென்றான். இது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் கோயிலுக்குச் சென்ற இவன் தானும் தற்கொலை செய்துகொண்டான். அவன் பயன்படுத்திய இரு துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கூலிப் படையில் சேர்ந்து கொலைகாரனாக மாற வேண்டும் என்றும் பெற்றோரை கொன்றுவிட்டு யாரும் இல்லாத இடத்துக்குத் தப்பிச் சென்று தனிமையில் வாழ வேண்டும் என்றும் இவன் நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளான் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்