முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 38 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

குவெட்டா,ஆக.10 - பாகிஸ்தானில் நடந்த சவ ஊர்வலத்தில் தீவிரவாதிதள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 38 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ரம்ஜான் நோன்பு தொடங்கியதிலிருந்தே பாகிஸ்தானில் நோன்பை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தொடர்ந்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகைகளும், பிரார்த்தனைகளும் பல்வேறு இடங்களில் நடைபெற்றன.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகர் அருகே சவ ஊர்வலம் நடைபெற்றது. போலீஸ் தலைமையகம் அருகே சென்றபோது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் உள்ளூர் இமாம் மகன் உள்பட 38 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்