எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மு, ஆக. 11 - ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே இந்திய நிலைகள் மீது கிட்டத்தட்ட 7 மணி நேரம் பாகிஸ்தான் துருப்புக்கள் அடாவடியாக துப்பாக்கிச் சூடு நடத்தின. கிட்டத்தட்ட 7 ஆயிரம் முறை நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் அடாவடியாக மீறி இந்த காரியத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். இதனால் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையால் அந்த பகுதிகளில் வாழும் மக்கள் பீதியால் உறைந்து போயினர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அவ்வப்போது இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அந்த முயற்சியை இந்திய ராணுவத்தினர் அவ்வப்போது முறியடித்து வருகிறார்கள். பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது எல்லைப் பகுதியில் நமக்கு தொல்லை கொடுத்து வருகிறது. கடந்த 6 ம் தேதியன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் தலைமையில் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய 20 பேர் இந்திய எல்லைப் பகுதியில் புகுந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் 5 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்று மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியிருந்தார். ஆனால் ராணுவமோ பாகிஸ்தான் படையினர்தான் காரணம் என்று கூறியிருந்தது. இவ்வாறு முரண்பட்ட தகவல் வெளியானதால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. தவறான தகவலை தந்த ஏ.கே. அந்தோணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எல்.கே.அத்வானி உட்பட பல தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து நெருக்கடிக்கு ஆளான மத்திய அமைச்சர் அந்தோணி பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். அப்போது அவர் முதலில் கிடைத்த தகவலைத்தான் சொன்னேன். எல்லையில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவம்தான். அவர்கள்தான் இதற்கு பொறுப்பு என்று பல்டியடித்து தனது புதிய விளக்கத்தை தெரிவித்தார். இருப்பினும் நமது பொறுமையை பாகிஸ்தான் சோதிக்கிறது. தொடர்ந்து இது போல் நடந்தால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அந்தோணி பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தக் கூடாது என்று அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். அடுத்த மாதம் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நடக்கிறது. அப்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சு நடத்த இந்திய பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையை நடத்தக்கூடாது. ஷெரீப்பை சந்திக்கவும் கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் 5 இந்திய வீரர்கள் பலியான ஒரு சில நாட்களிலேயே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் வாலாட்ட தொடங்கி விட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் 7 மணி நேரம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அதாவது 7 ஆயிரம் முறை துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. கடுமையான ஆயுதங்களை பயன்படுத்தியும், வெடிகுண்டு வீசியும் கூட இவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் இப்படி அடாவடியாக மீறியுள்ளது. இது மிகப் பெரிய போர் நிறுத்த ஒப்பந்த மீறல் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும் இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இந்திய தரப்பில் இல்லை. தாக்குதலை சமாளித்த இந்திய ராணுவத்தினர் பின்னர் அதற்கு தகுந்த பதிலடியும் கொடுத்தனர். பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீது கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கடந்த வெள்ளிக் கிழமை இரவு 10.20 மணியளவில் இந்த சம்பவம் பூஞ்ச் மாவட்டத்தில் துர்காபட்டாலியன் பகுதியில் நடந்ததாக ராணுவ உயரதிகாரி எஸ்.என். ஆச்சார்யா தெரிவித்தார். 7 ஆயிரம் முறை அவர்கள் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர்கள் சனிக்கிழமை காலை 4.30 மணி வரை இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இது மிகப் பெரும் போர் நிறுத்த ஒப்பந்த மீறலாகும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். அதே நேரம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுத்தது. இரு தரப்பிலும் கடுமையான துப்பாக்கி சண்டையும் நடந்தது. இயந்திர துப்பாக்கிகளும் அப்போது பயன்படுத்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட சப்தத்தால் எல்லை பகுதியில் வாழும் மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டதாம். இந்த சண்டையை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை இனி நடக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்று சொல்லும் பாகிஸ்தான் மறுபக்கம் அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னால் 2 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களில் ஒருவரது தலையையும் துண்டித்து எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். இப்படிப்பட்ட அடாவடி செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவது இந்திய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 5 வீரர்களை அவர்கள் கொன்றதால் குறைந்தபட்சம் 50 பாகிஸ்தான் வீரர்களையாவது கொல்ல வேண்டும் என்று பாபா ராம்தேவ் உட்பட ஒரு சில தலைவர்கள் சொல்லும் அளவுக்கு நிலைமை கைமீறி போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.