முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் இறந்த பொறியியல் மாணவி உடல் அடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.12 - லண்டனில் மர்மமான முறையில் இறந்த பொறியியல் மாணவி ஜார்ஜியாவின் உடல் நேற்று முன்தினம் சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை, ஜெ.ஜெ.நகர் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் தாம்சனின் மகள் ஜார்ஜியா, லண்டனில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழக விடுதியில் கடந்த ஜூலை 22-ம் தேதியன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஜார்ஜியா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்ததாம். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், மீண்டும் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தாம்சன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த திங்கள்கிழமை இரண்டாவது முறையாக பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜார்ஜியாவின் உடல் எமிரெட்ஸ் விமானம் மூலம் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.

அண்ணா நகரில் உள்ள செயின்ட் லூக் சர்ச்சில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு கீழ்ப்பாக்கம் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்