முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்கத்தில் நிலக்கரி குவியல் சரிந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வரம், ஆக. 12 - மகாநதி நிலக்கரி நிறுவனத்தின் வசுந்தரா கர்ஜன்பஹால் சுரங்க பகுதியில் திறந்தவெளி கிடங்கில் கொட்டப்பட்டிருந்த நிலக்கரி குவியல் திடீரென சரிந்ததில் 8 தொழிலாளர்கள் புதையுண்டு இறந்தனர். 5 பேர் காயமடைந்தனர். சுந்தர்கர் மாவட்டம் பிலிங்கா அருகே திறந்தவெளி நிலக்கரி கிடங்கில் சுமார் 30 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அதிகமாக இருப்பு வைத்ததால் பளு தாங்காமல் நிலக்கரி குவியல் திடீரென சரிந்தது. அருகே பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் அதில் உயிருடன் புதைந்தனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயங்களுடன் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்குமாறு வருவாய் கோட்ட ஆணையருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்