முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெம்கா குற்றச்சாட்டு: அரியானா முதல்வர் மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

சண்டிகார், ஆக. 12 - காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீது நில மோசடி புகார்கள் கூறப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா 100 பக்க ஆவணத்தை வெளியிட்டுள்ளார். அதில் ராபர்ட் வதேராவுக்கு அரியானா அரசு செய்த உதவிகளை அவர் பட்டியலிட்டுள்ளார். ஆனால் அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 

தனது அரசு சட்டவிரோத அடிப்படையில் எந்தவொரு தனி நபருக்கோ, அல்லது கம்பெனிக்கோ எந்த உதவியோ, ஆதரவோ அளிக்கவில்லை என்று ஹூடா மறுத்துள்ளார். மாநில தலைமை செயலாளர் பிரதீப் குமார் சவுத்ரி கூறுகையில், கெம்காவின் பதில் குறித்து மாநில அரசு ஆய்வு செய்யும் என்று கூறியுள்ளார். அரியானா மாநிலத்தில் ராபர்ட் வதேராவுக்கு 3.53 ஏக்கர் நிலம் ஒரு நிறுவனத்தால் விற்கப்பட்டது. இதில்தான் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்காவும் உறுதிப்படுத்தி உள்ளார். ஆனால் முதல்வரோ அதை மறுக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்