முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

`தலைவா' பிரச்சினை: முதல்வர் ஆவண செய்ய வேண்டுகோள்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.13 - எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர் `தலைவா' படப்பிரச்சினையிலும் தலையிட்டு ஆவண செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிற்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். தலைவா திருட்டு சிடி தொடர்பாக நடிகர் விஜய் அறிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

சேலத்தில் தலைவா திரைப்படத்தின் திருட்டு சி.டி. தயாரித்தவர்களை பிடித்துக் கொடுத்த விஜய் ரசிகர்களையும் காவல்துறையையும் விஜய் பாராட்டியதோடு முதல்வருக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

திருட்டு சி.டி.தயாரிப்பதும் விற்பதும் சட்டப்படிக் குற்றமாகும். அன்பு ரசிகர்களே தலைவா திரைப்படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை அதற்குள் திருட்டு சி.டி.யை தயாரித்தாலோ விற்றாலோ உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.

நமது முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை தந்து வருகிறார். என்.எல்.சி.பிரச்சினை, காவேரி நீர் பிரச்சினை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, லேப்டாப் உதவி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இப்படி எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வருகிறார். அவருடைய வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர் தலைவா பிரிச்சினையிலும் தலையிட்டு, விரைவில் தமிழகமெங்கும் தலைவா வெளிவர ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதுவரை என் ரசிகர்கள் ஒவ்வொருவரும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்