முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உம்மன்சான்டி பதவி விலக இ.கம்யூனிஸ்ட் கோரிக்கை

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

திருவனந்தபுரம் ஆக 13-  கேரளா மாநிலத்தில் நடந்த சோலார் ஊழலையடுத்து அம்மாநில முதல்வர் உம்மன்சான்டி பதவி விலக வேண்டும் என்று இ.கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் இடது ஜனநாயக முன்னணி தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, மக்கள் மீது உம்மன்சான்டி நம்பிக்கை, மதிப்பு வைத்திருப்பது உண்மையானால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தங்கள் அமைச்சகங்களில் அல்லது அலுவலகங்களில் என்ன நடந்தாலும் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்பது போல காங்கிரஸ் தலைவர்கள்  நடந்து கொள்கிறார்கள். இது வெக்ககேடு, மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் கூட தார்மீக அடிப்படையில் பதவி விலகுகிறார்கள். ஆனால் இவர்கள் அப்படி செய்வதில்லை. ஊழலை காப்பாற்ற எந்த அளவிற்கும் போக இவர்கள் தயாராகி விட்டார்கள் என்று பிரகாஷ்காரத் கூறினார். இந்த ஊழல் குறித்து ஒரு நீதி விசாரணை கமிஷன்  அமைத்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று  முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்